நீராட சென்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
2திருகோணமலையில் தொடர்ந்தும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருகோணமலை-மாவிலாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுகிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். பேராதனை – முர்தலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், சேருநுவர காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed